உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2022-12-31 08:30 GMT   |   Update On 2022-12-31 08:30 GMT
  • மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில்
  • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் 1991-94ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ம.செல்வராசு தலைமை வகித்தார். பேராசிரியர் வே.அ.பழனியப்பன் வரவேற்றார். ஒய்வு பெற்ற பேராசிரியர்கள் திருமா.பூங்குன்றன், ராமாயி, அரங்கநாதன், ரோஸ்லெட், விஜயரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் 1991-1994ல் பயின்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழாசிரியர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரிக்கால அனுபவங்களை, நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை முன்னாள் மாணவர் தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் ஒருங்கிணைத்தார். தமிழாசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார். முன்னதாக முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்வில் கல்வி ஒளியேற்றிய ஒய்வு பெற்ற பேராசிரியர்களை பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.


Tags:    

Similar News