உள்ளூர் செய்திகள்

திறனறிவுத்தேர்வில் ஆலங்குடி புனித அற்புத மாதா பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-06-29 08:46 GMT   |   Update On 2022-06-29 08:46 GMT
  • ஆலங்குடி புனித அற்புத மாதா உதவிபெறும் நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • வெற்றிபெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதாந்திரம் ரூ 1000 வீதம்அரசு வழங்குகிறது.

புதுக்கோட்டை:

2021-22 கல்வி ஆண்டில் மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி மற்றும் தேசிய திறனறி தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புத மாதா உதவிபெறும் நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதாந்திரம் ரூ 1000 வீதம்அரசு வழங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களையும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இச்சாதனை நிகழ்த்த காரணமாக உள்ள ஆசிரியப் பெருமக்களையும், மாணவர்களையும், பள்ளி நிர்வாகி ஆர்.கே.அடிகளார் மற்றும் தலைமை ஆசிரியர் சூசைராஜ் இருவரும் பாராட்டினர்.

Tags:    

Similar News