உள்ளூர் செய்திகள்

அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை நடைபெற்றது

Published On 2022-08-15 06:55 GMT   |   Update On 2022-08-15 06:55 GMT
  • அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை நடைபெற்றது
  • 1,401 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

புதுக்கோட்டை:

அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 31 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 9-ந் தேதி தேரோட்ட விழா நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயிலின் அறங்காவலா் ராம. ராஜா அம்பலகாரா் தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் தொடக்கமாக அழகிய நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற விளக்குப் பூஜையில் 1,401 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். சிவாச்சாரியாா் சரவணன் குருக்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி பூஜையை வழிநடத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை குழுவினா் செய்திருந்தனா்.

Tags:    

Similar News