உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி

Published On 2023-06-20 11:40 IST   |   Update On 2023-06-20 11:40:00 IST
  • விராலிமலை ஒன்றியங்களில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்றது
  • ஊராட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை வழங்கினார்

விராலிமலை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியங்களில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உறுப்பினர் சேர்க்கை பணிகளை விரைவுபடுத்துவது குறித்து நேற்றைய தினம் ஒவ்வொரு ஊராட்சியை சார்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து , ஏற்கனவே பதிவு செய்துள்ள உறுப்பினர் படிவங்களை பெற்றுக் கொண்டும், புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் விவரித்தார்.கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்த்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைப்போம் என்று கழக நிர்வாகிகளிடம் கூறினார். கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜன், கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யப்பன், விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட வேளாண் விற்பனை குழு துணை தலைவர் வெல்கம் மோகன்,நகர செயலாளர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் ஐயப்பன், சுப்பிரமணியன், மணிகண்டன்,வசந்தி குணசேகர், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News