உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

Published On 2023-06-16 12:30 IST   |   Update On 2023-06-16 12:30:00 IST
  • கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மைலன்கோன்படி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மினி. விவசாயியான இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சம்பவத்தன்று ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது அருகில் இருந்த கிணற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனை கண்ட பத்மினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கறம்பக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரி மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News