உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
- கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
- தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கினர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே மாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், இவரது பசுமாடு, சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.