உள்ளூர் செய்திகள்

ஆடுகள் திருடிய வாலிபர்கள் 5 பேர் கைது

Published On 2022-08-22 13:56 IST   |   Update On 2022-08-22 13:56:00 IST
  • ஆடுகள் திருடிய வாலிபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 58 ஆடுகள் பறிமுதல்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கிளரிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 49). இவர் அதே பகுதியில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பட்டியில் இருந்து 21 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து அவர் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், விசாரணை மேற்கொண்டு 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 58 ஆடுகள் பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News