புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா-அரசு நலத்திட்ட உதவிகள்
- புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா-அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கறம்பக்குடி தாலுகா, பட்டத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மேலும் இதேபோல், குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் ஊராட்சி, ரெங்கம்மாள்சத்திரம் கிராமத்தில் வசிக்கும் 95 நரிக்குறவர் சமூக மக்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் 2 ஆட்டுக்குட்டிகளையும்,
தலா ரூ.5,000 வீதம் துளசிமணி பாசி செய்வதற்கான ஒரு மாதத்திற்கு தேவையான மூலப் பொருட்களையும், பாசி உற்பத்தி செய்து கடைகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வழங்கினார். மேலும் காமராஜபுரத்தைச் சேர்ந்த 51 நபர்களுக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்களையும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.