உள்ளூர் செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 3ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2023-07-08 07:42 GMT   |   Update On 2023-07-08 07:42 GMT
  • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ௩ ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
  • கழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார்.

கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகா ஈஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த திருமண விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா,நகரச் செயலாளர் ராஜா ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார்,அரவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமரை. பழனிவேலு மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.


Tags:    

Similar News