உள்ளூர் செய்திகள்
- பொன்னமராவதி ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ஆவுடையே சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான், தாயார் சாயாதேவியுடன் அருள் பாலிக்கிறார். கால பைரவர் சனீஸ்வர பகவானை பார்த்து வீற்றீருப்பதால் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1008 பெண்கள் கலந்துகொண்டனர்.
திருவிளக்கு பூஜையில் சிவாச்சாரியார் பாலாஜி தலைமையில் வேத மந்திரங்களை பெண்கள் உச்சரித்து, மற்றும் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.அதன் பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.