உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே ரத்த தான முகாம்

Published On 2022-07-17 09:12 GMT   |   Update On 2022-07-17 09:12 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாம் தமிழர் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது
  • முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாம் தமிழர் கட்சி, இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவர் அருள் தலைமை தாங்கினார். மருத்துவர் அரவிந்த் முன்னிலை வைத்தார்.

முகாமிற்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்ட ஏராளமானோர் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்.

மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அருள் டாக்டர் அரவிந்த், சுகாதார ஆ ய்வாளர் திருச்செல்வம் உள்ளிட்ட குழுவினர் இந்த முகாம் மூலம் 30 நபர்களுக்கும் மேல் தானமாக அளித்த ரத்தத்தை பெற்றனர்.

இதேபோல் பொதுமக்களிடையே ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும், தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்பதை மக்கள் உணர்ந்து பிறருக்கு உதவிட வேண்டும் என்றும் இந்த முகாமில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News