உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-10-22 10:39 GMT   |   Update On 2023-10-22 10:39 GMT
  • அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.
  • பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.

இவரது மனைவி கவிநிலா ( வயது 24) .

இவர் கர்ப்பமான நிலையில் நாட்டுச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பிரச வத்திற்காக சேர்க்க ப்பட்ட கவிநிலாவை நாட்டை ச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க வைத்து விட்டு டாக்டர் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கவிநிலா விற்கு பணிக்குடம் உடைந்து விட்டதாகவும் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளனர்.

அதன் பிறகு ஆம்புலன்ஸ் பிடித்து கவிநிலாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை அளித்த போது தாயை காப்பாற்ற முடிந்தது, தாமதமாக வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திமடைந்த அவரது உறவினர்கள் எங்களது குழந்தையின் உயிர் போக காரணமாக இருந்த வர்களை கைது செய்ய வேண்டும், குழந்தை இறந்த குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் தொடர்ந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படாத பட்சத்தில் பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் ராமச்சந்திரன் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இது குறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News