உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- வீரபத்திரசாமி கோவில் வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும், மேலே செல்லும் மின்கம்பியில் மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே அன்னை இந்திராகாந்தி சாலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வீரபத்திரசாமி கோவில்.
இந்த கோவில் வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.
இந்த மரம் தற்போது பட்டுபோய் உள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும், மேலே செல்லும் மின்கம்பியில் மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் நடந்து செல்லும் இடமாக உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.