உள்ளூர் செய்திகள்

ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.

ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கல்

Published On 2022-12-10 07:00 GMT   |   Update On 2022-12-10 07:00 GMT
  • புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
  • 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

நாகப்பட்டினம்:

சமூகசேவகர் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் சுமார் 11 வருடங்களாக சாலையோரம் ஆதரவின்றி வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினந்தோறும் 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கி மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களை முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.

அதன்படி நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வழங்கினார்.

இதில் பாரதிமோகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News