உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீடு கட்டிக்கொடுத்து வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீடு வழங்கல்

Published On 2023-07-01 09:38 GMT   |   Update On 2023-07-01 09:38 GMT
  • போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.
  • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் வேலை நடைபெற்று வந்தது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் சொந்த வீடு இல்லாமல் பல்வேறு இடங்களில் வசித்து வந்த விளிம்பு நிலை மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படி வட்டாட்சியர் த.சுகுமார் அறிவுறுத்தலின்படி இது வரை 1500 பேருக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்ய ப்பட்டு வழங்கப்பட்டது.

பேராவூரணி அருகே திருவள்ளுவர்புரம் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி தேவிகா(34) தனது தாயார் சகுந்தலா ஆதரவுடன் வசித்து வருகிறார்.

போலி யோவால் பாதிக்கப்பட்டு கால்கள் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.தனக்கு உதவி செய்திட வேண்டும் என பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரிடம் மனு கொடுத்திருந்தார்.

இதனை அறிந்த கோட்டாட்சியர் பிரபாகரன் உதவி செய்வதாக கூறி உள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்சூசை வீடு கட்டி கொடுப்பதாக உறுதி கூறினார். ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் வேலை நடைபெற்று வந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் பிரபாகரன் புதிய இல்லத்தை திறந்து வைத்தார்.

உடன் வட்டாட்சி யர் சுகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் சுமதி நீலகண்டன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக வீடு கட்டிக் கொடுத்த அருள் சூசை மற்றும் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் சுகுமார் ஆகியோருக்கு தேவிகா மற்றும் அவரது தாயார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News