உள்ளூர் செய்திகள்

இலவச மிதிவண்டியை மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.

திட்டச்சேரி அரசு பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கல்

Published On 2022-10-13 14:48 IST   |   Update On 2022-10-13 14:48:00 IST
  • நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், 179 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.

மழைக்காலம் என்பதால் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தங்களுடைய சொந்த செலவில் குடைகள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News