உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட மாயாண்டி

அரசு வேலை வழங்ககோரி சீவலப்பேரி வாலிபர் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம் - தாசில்தார் பேச்சுவார்த்தை

Published On 2022-11-12 14:52 IST   |   Update On 2022-11-12 14:52:00 IST
  • கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்க போவதாக தகவல் வந்ததையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை:

பாளை சீவலப்பேரியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 39). இவர் நேற்று முன்தினம் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

உறவினர்கள் போராட்டம்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவமனையில் மாயாண்டியின் குடும்பத்தி னர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பாளை தாசில்தார் ஆனந்த பிரசாத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு சீவலப்பேரி சுடலை கோவில் பூசாரி துரை என்ற சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இதுவரை அரசு வேலை வழங்கப்பட வில்லை. எனவே அவரது குடும்பத்தின ருக்கும், மாயாண்டியின் குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும்.

அப்பொழுது தான் மாயாண்டியின் உடலை பெற்று செல்வோம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுடன் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

இந்நிலையில் இவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்க போவதாக தகவல் வந்ததையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News