கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
நிலக்கோட்டை பகுதியில் தொடரும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
- அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்.
- அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் உள்ள கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜ புரம், அணை ப்பட்டி, எம்.குரும்பபட்டி, என்.ஊத்துப்பட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, மட்ட ப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, குளத்துபட்டி, என்.கோவி ல்பட்டி, தெப்பத்துப்பட்டி, குன்னத்துப்பட்டி, தருமத்துப்பட்டி, விராலிமலையன்பட்டி, விருவீடு, தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியு றுத்தி பிரமலைக்க ள்ளர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதனை அறிந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் போலீசார் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் உங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து விட்டீர்கள் கருப்புக்கொடியை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்.
அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் பள்ளிக் கல்வியோடு அரசு கள்ளர் பள்ளிகளை இணைக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் அரசாங்க கைரேகைச் சட்டம் அடக்கு முறையை எதிர்த்து போராடிய எங்கள் முன்னோர்கள் 16 பேர் உயிரிழப்பை தொடர்ந்து உருவான கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினை திரும்பப் பெற வேண்டும். அது வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.