உள்ளூர் செய்திகள்

அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Published On 2023-08-02 15:48 IST   |   Update On 2023-08-02 15:48:00 IST
  • அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் தனக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.
  • கானாப்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு தனது ஆதரவாளர்களை திரட்டி தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

 தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாலவாடியில் கிராம அறங்காவலர் குழு தலைவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் தனக்கு வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் இவருக்கு மாவட்ட அறங்காவர் குழு தலைவர் பரிந்துரை செய்யவில்லை.

இதையறிந்த இவர் அறங்காவலர் குழு தலைவர் பதவி தரவில்லை என தெரிந்ததும் கானாப்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு தனது ஆதரவாளர்களை திரட்டி தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பரிந்துரையை மீறி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு வேறு ஒரு நபரை பரிந்துரை செய்ததாக கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாக கூறி போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News