உள்ளூர் செய்திகள்

தாயனூர் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொது மக்கள் இன்று காலை சாலை மறியல்

Published On 2023-07-22 07:46 GMT   |   Update On 2023-07-22 07:46 GMT
  • தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
  • அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராம த்தில் தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செல்போன் டவர் பொது மக்களின் குடியிரு ப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேல்மலையனூர் அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அவலூ ர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடு ப்பதாக கூறியதின்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போ க்குவரத்து பாதிக்க ப்பட்டது.

Tags:    

Similar News