உள்ளூர் செய்திகள்

சொத்து வரி உயர்வு: திருப்பூரில் வியாபாரிகள் போராட்டம்- 18-ந்தேதி கடைகள் அடைப்பு

Published On 2024-12-09 11:00 IST   |   Update On 2024-12-09 11:00:00 IST
  • இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதித்தி ருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் அரிசி கடை வீதி, பழைய மார்க்கெட் வீதி , புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர். அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவையின் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.

வருகிற 18-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News