உள்ளூர் செய்திகள்
புதுப்பேட்டையில் அதிரடி தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்
- அரசு அனுமதி இன்றி ஹான்ஸ்விற்பனை செய்தது தெரியவந்தது.
- விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உதவிஆய்வாளர்(பயிற்சி)ஜெயந்தி ஆகியோர் புதுப்பேட்டையில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுப்பேட்டையில் புதுநகர்கணேசன் மனைவிகலா நடத்தி வந்த பெட்டிக்கடையில்அரசு அனுமதி இன்றி ஹான்ஸ்விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விற்பனைக்காக வைக்க ப்பட்டிருந்தஹான்ஸ் பாக்கெட்டுகளைபறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்திஅவரை கைது செய்தனர்.