உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

தென்காசியில் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2022-09-17 09:34 GMT   |   Update On 2022-09-17 09:34 GMT
  • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டி
  • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோர் வழங்கினர்.

முதல் பரிசு ரூ.5 ஆயிரம் 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்திற்கான காசோலைகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News