உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

Published On 2023-04-10 09:11 GMT   |   Update On 2023-04-10 09:11 GMT
  • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
  • பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்:

பாபநாசம் புனித செபஸ்தியார் உதவிபெறும் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளரும், பங்குதந்தையுமான காேஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.

இணை பங்குதந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், முத்துமேரி மைக்கேல் ராஜ், பாபநாசம் பெனிபிட் பண்ட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆறுமுகம், பாபநாசம் லயன்ஸ் கிளப் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், ஆசிரியர் பயிற்றுனர் அகிலா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆபிரகாம் பாபு தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை கேத்ரின் ஆலிஸ் ராணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News