உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.

தருவைகுளத்தில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

Published On 2022-07-17 14:22 IST   |   Update On 2022-07-17 14:22:00 IST
  • மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.
  • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி:

தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளம் புனித மிக்கேல் ஆங்கில பள்ளியில் பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளையும், மன்ற செயலாளர் செல்வசேகர் மெடல்களையும், மன்ற பொருளாளர் தேவதிரவியம் சான்றிதழையும் வழங்கினர்.

விழாவில் மன்ற துணை செயலாளர் நீக்குலாஸ், துணை தலைவர் வில்சன் மற்றும் ராஜன், பேட்ரிக், பாக்கியம், ஆலோசனை மரியான், ராஜேந்திரன் மற்றும் காமராஜர் நற்பணிமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், லாரன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News