உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை

Published On 2023-03-29 09:01 GMT   |   Update On 2023-03-29 09:01 GMT
  • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது.
  • கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கப்பச்சி கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிபோட்டி நடந்தது.

இதில் இளித்துறை அணிக்கும் கெங்கமுடி அணியும் மோதின. இந்த போட்டியில் கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டனர். அவருக்கு கிளப் சார்பில் மேளத்தளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளர்ச்சிக்காக ரூபாய்_25000 நிதி உதவி வழங்கினார்.

Tags:    

Similar News