உள்ளூர் செய்திகள்
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு
- அரசு பள்ளிகளை சேர்ந்த 20-க்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 6 மாணவிகள் தங்க பதக்கம் பெற்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் சார்பில் இளைஞர்களுக்கான டேக்வாண்டோ போட்டி-23 புதுச்சேரியில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்றது.
இப்போட்டிக்கு நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்,திருப்புகலூர் புறாகிராமம் உள்ளிட்ட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 20- மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாணவிகள் 6 பேர் தங்கப்பதக்கமும், மாணவர்கள் 5 பேர் தங்கப்பதக்கமும், 6 சில்வர் பதக்கமும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.
இதற்கான ஏற்பாடுகளை கிரண்ட் மாஸ்டர்கள் இளங்கோவன், பாண்டியன் பயிற்சியாளர் மாஸ்டர் வெங்கடேசன் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.