உள்ளூர் செய்திகள்
போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- வெள்ளாளன்விளையில் கணிதம் பிரிவில் போட்டி தேர்வு நடந்தது.
- தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்குட்பட்ட வெள்ளாளன்விளையில் ஓய்.பி.ஏ. சார்பில் போட்டி தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கணிதம் பிரிவில் போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுடலைமணி முதலிடமும், நாராயணமூர்த்தி இரண்டாமிடமும், பாலசுப்பிரமணியன் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஓய்.பி.ஏ. தலைவர் ஜான்கென்னடி டி.எஸ்.பி, மத்திய அரசு ஊழியர் ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். போட்டித் தேர்வினை வணிகவரித்துறை அதிகாரி ஜேக்கப், பால்வளத்துறை அதிகாரி பிரவீன், வி.ஏ.ஓ.க்கள் முத்துராமன், டேனியல், ஜெயசந்திரன், பிஷப் அசரியா நினைவு ஆங்கில பள்ளி முதல்வர் லீதியால் தனசீலி, ஆசிரியை ஷிபா ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். பரிசுகளை உதிரமாடன்குடியிருப்பை சேர்ந்த ரவி, ஜெயசந்திரன் ஆகியோர் வழங்கினர்.