உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் அருகே தனியார்- அரசு பஸ் மோதல்;5 பேர் காயம்

Published On 2023-02-16 04:48 GMT   |   Update On 2023-02-16 04:48 GMT
  • வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.
  • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளகோவில் :

ஈரோடு மாவட்டம் கொடுமுடியிலிருந்து திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் ஈரோட்டிலிருந்து வெள்ளக்கோவில் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது முத்தூா் - வெள்ளக்கோவில் சாலை அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியாா் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் 2 பேருந்துகளும் சேதமடைந்தன. 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News