உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்

Published On 2023-04-24 10:01 GMT   |   Update On 2023-04-24 10:01 GMT
  • நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை.
  • பதறிப்போன கலையரசின் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடி பார்த்தனர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.

இவரது மகள் கலையரசி (வயது22). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கலையரசி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன கலையரசின் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடி பார்த்தனர். அவர் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து தாய் பூங்கொடி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கலையரசியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News