உள்ளூர் செய்திகள்
ராசிபுரம் கைலாச நாதர் கோவிலில் பிரதோஷ விழா
- பிரசித்தி பெற்ற கைலாச நாதர் கோவில் உள்ளது.
- தொடர்ந்து கைலாச நாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாச நாதர் கோவில் உள்ளது. இங்கு, மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தயிர், பால், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கைலாச நாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கைலாசநாதர் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.