அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி விசைத்தறி தொழிலாளர்கள் 4-வது நாளாக போராட்டம்
- விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.
- இன்று 4-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி, டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி ஆகிய பகுதி களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு டி.சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை அறிவித்து விசைத்தறிகளை இயக்கா மல் உள்ளனர். இதன் காரணமாக தினந்தோறும் ரூ.20 லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆண்டி பட்டி வட்டாட்சியர் சுந்த ர்லால், டி.எஸ்.பி. ராம லிங்கம் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே தங்களது போராட்டம் தொடரும் என விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்து இன்று 4-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தையில் பாரதிய ஜனதா தொழிற்சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், சரவணன், சுப்பிரமணி, ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்கம் சேட், அருணாசலம், அருண்மதி கணேசன், மணி, காளை, தொ.மு.ச. செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. சென்றாய பெருமாள், சி.ஐ.டி.யு. ராமர், ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஷியாம் சுந்தர், நாகராஜ், அன்பழகன் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.