உள்ளூர் செய்திகள்

தச்சநல்லூரில் நாளை மின்தடை

Published On 2022-07-25 10:14 GMT   |   Update On 2022-07-25 10:14 GMT
  • துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • மின்பாதையை பாராமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாநகரில் தச்சநல்லூர் மற்றும் தியாகராஜ நகர் துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அெவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம், இருதய நகர், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, முத்தூர், கொடிக்குளம் மற்றும் ஸ்ரீராமன்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அன்றைய தினம் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News