உள்ளூர் செய்திகள்

தஞ்சை அருகே நாளை மின்நிறுத்தம்

Published On 2023-10-12 09:44 GMT   |   Update On 2023-10-12 09:44 GMT
  • தஞ்சை துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை அருகே உள்ள பூண்டி, ராகவாம்பாள்புரம் துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாதபுரம், சூழிய க்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளம ர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை க்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசபட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News