உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-06-30 11:02 GMT   |   Update On 2023-06-30 11:02 GMT
  • சாலை விரிவாக்கப்பணி தொடர்பாக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
  • காலை 09.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதையில் நாளை ( சனிக்கிழமை ) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையம், அண்ணா சிலை, சாமந்தான் குளம், தென்கீழ் அலங்கம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்து ள்ளார்.

Tags:    

Similar News