உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-08-06 06:55 GMT   |   Update On 2023-08-06 06:55 GMT
  • திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
  • வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்கள்

விழுப்புரம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 7-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News