உள்ளூர் செய்திகள்
ஓசூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்சாரம் இருக்காது.
ஓசூர்,
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் மின் நகர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை,சான சந்திரம், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, சானமாவு, கொல்லப்பள்ளி, திருச்சி பள்ளி, பழைய டெம்பிள் ஹட்கோ, சீதாராம் நகர், வானவில் நகர், புனுகன் தொட்டி, தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம், தின்னூர், நவதி, ஐ.டி.ஐ, வாசுகி நகர், அம்மன் நகர், குருபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.