உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் நாளை மறுதினம் மின்தடை

Published On 2023-10-19 13:18 IST   |   Update On 2023-10-19 13:18:00 IST
  • அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

திண்டுக்கல்:

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர்,

தாய்முகாம்பிகை நகர் மற்றும் பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News