உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- தருமபுரி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
தருமபுரி,
தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
அதனால் தருமபுரி பஸ் நிலையம், கடைவீதி, ஜெட்டி அள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜா பேட்டை, நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிபட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.