உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2023-07-09 04:19 GMT   |   Update On 2023-07-09 04:19 GMT
  • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது.
  • முதல் யூனிட் 3-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மீஞ்சூர்:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் முதல் யூனிட் 3-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News