உள்ளூர் செய்திகள்

தபால்துறை சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம்

Published On 2023-06-18 09:49 GMT   |   Update On 2023-06-18 09:49 GMT
  • தங்களது புகார்களை தபால் உறையின் மீது எழுதி வருகிற 23ம் தேதிக்குள் சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  • தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற 30-ம் தேதி நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்ைகையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

அஞ்சலக வாடிக்கை யாளர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது புகார்களை தபால் உறையின் மீது எழுதி வருகிற 23ம் தேதிக்குள் சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நீங்கள்அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

பதிவு தபால், எம்.ஓ., வி.பி., இன்சூர்டு தபால் மற்றும் விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விபரம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News