உள்ளூர் செய்திகள்

எறிபந்து போட்டியில் பொங்கலூர் பள்ளி சாதனை

Published On 2023-02-23 03:44 GMT   |   Update On 2023-02-23 03:44 GMT
  • முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.
  • மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

பல்லடம் :

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்திலும் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.

அந்தவகையில் இந்த 2022 - 2023-ம் கல்வி ஆண்டின் 14 வயதிற்கு உட்பட்ட மாநில அளவிலான எறிபந்துப் போட்டி திருச்சி மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர், பொ.வெ.க. மேல்நிலைப்பள்ளி வீரர்கள் காலிறுதியில் திருவள்ளூர் மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையிறுதியில் தருமபுரி மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர்.

இறுதிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியுடன் விளையாடி அதிலும் வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

இந்த பள்ளி அணியினர் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ்குமார், சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாலன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News