பண்ருட்டி அருகே போலீஸ்காரர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை
- சக்திவேல் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
- முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணங்கார குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். சக்திவேலிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாவுடன் தகராறில் ஈடுபடுவார். இதேபோல் நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உமாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த உமா தனது விவசாய நிலத்திற்கு சென்று அங்கிருந்த முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உமாவின் தாய் ராணி முத்தாண்டிக்குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.