உள்ளூர் செய்திகள்

செல்போன் பழுது பார்க்கும் கடையை உடைத்து கொள்ளை- ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்

Published On 2022-09-23 12:35 IST   |   Update On 2022-09-23 12:35:00 IST
  • கங்கையம்மன் நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதுரவாயல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போரூர்:

மதுரவாயல், கங்கையம்மன் நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதுரவாயல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதி 7வது தெருவில் உள்ள செல்போன் பழுது பார்க்கும் கடையை உடைத்து புகுந்த 4 மர்ம நபர்கள் அங்கிருந்து செல்போன்களை சுருட்டிக் கொண்டு வெளியே வந்தனர். இதை கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் குணசேகரன் அவர்களை விரட்டி சென்று ஒருவனை மட்டும் மடக்கி பிடித்தார். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ராயப்பேட்டையை சேர்ந்த சித்தார்த் (19) என்பது தெரியவந்தது. அவனிடம் தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News