உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு போலீசார் விசாரணை

Published On 2023-01-13 10:02 GMT   |   Update On 2023-01-13 10:02 GMT
  • வாலிபர் ஒருவர் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • அடிபட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 திருப்பூர் :

திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே மரக்கடை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News