உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கேபிள் ஆபரேட்டர் இறப்பு குறித்து உறவினர்களிடம் விசாரணை

Published On 2022-06-30 07:51 GMT   |   Update On 2022-06-30 07:51 GMT
  • ஆடலூர் செல்லும் சாலையில் தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
  • முனீஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள பச்சமலையான்கோட்டையை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 32). இவர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை தருமத்துப்பட்டி அருகே ஆடலூர் செல்லும் சாலையில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனீஸ்வரனுக்கு 2 முறை திருமணம் நடந்து மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு வேறு சில பெண்களுடனும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவரை தாக்கி இங்கே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று ேபாலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே தெரியவரும்.

ஆடலூர் பகுதியில் இவருக்கு தெரிந்தவர்கள் யாரேனும் உள்ளனரா என்றும் இவர் யார் யாரிடம் செல்போனில் பேசினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பிறகே இவர் இறப்பில் ஏற்பட்ட மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முனீஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News