உள்ளூர் செய்திகள்

பிற மாநில தொழிலாளர்களுக்கு வாழப்பாடி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி. 

பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் கலந்துரையாடல்

Published On 2023-03-11 09:30 GMT   |   Update On 2023-03-11 09:30 GMT
  • வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் நேற்று ஆய்வு செய்தனர்.
  • பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாழப்பாடி:

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Tags:    

Similar News