உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் வி.சி.க மாவட்ட செயலாளர் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு

Published On 2023-03-24 09:33 GMT   |   Update On 2023-03-24 09:33 GMT
  • 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
  • சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடலூர்:

கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கொடுத்த புகாரின் நெல்லிக்குப்பம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News