நகைக்கடையில் கொள்ளையில் 2 மர்ம நபர்களை போலீசார் தேடுதல் வேட்டை
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
- 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையில் முன்பக்கம் உள்ள ஷட்டர் பூட்டை உடைத்து கதவை திறந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்த வர் சீனிவாசன். இவரது மனைவி மைதிலி (வயது36).
இவர் பாப்பாரப்பட்டி கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இதில் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கதவின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வெள்ளி நகைகள் மற்றும் டம்ளர்கள் உள்ளிட்ட 10 கிலோ எடையுள்ள சுமார் 2 லட்சம் ரூபாய் வெள்ளி நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மைதிலி பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையில் முன்பக்கம் உள்ள ஷட்டர் பூட்டை உடைத்து கதவை திறந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.