உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேவதானப்பட்டியில் பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2023-05-12 11:33 IST   |   Update On 2023-05-12 11:33:00 IST
  • சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
  • மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி, மே.12-

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்த முருகேசன் மகள் ஸ்ரீதேவி(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News